குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்?
குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்
குருபகவான் நவகிரகங்களிலே தோஷம் அற்றவரும் முழு சுப கிரகமான இருக்கிறார் அவர் சஞ்சரிக்கும் இடத்தை பொறுத்து கிடைக்கும் பலன்.
ஜென்ம குருவால் சோதனைகள் இருந்தாலும் அனைத்திலும் வெற்றியும் பூரண ஆயுளும் கிடைக்கும். தனகுருவால் செல்வ சிலைப்பு வாழ்வில் பொருளாதார ரீதியான முன்னேற்றம் நிறைந்து கிடைக்கும்.
மூன்றில் இருந்தால் சில தடைகள் வந்தாலும் வெற்றி நிச்சயம், நான்கில் இருப்பது நன்மையை கொடுக்கும். ஐந்தாம் இடத்தில் இருப்பதால் எதிர்பார்க்கக் கூடிய செல்வ வளம் பெருகும் வீட்டில் மகிழ்ச்சி நிறைவாக அமையும்.
ஆறில் குரு பொருளாதார ரீதியான சில சிக்கல் ஏற்படலாம், ஏழில் குரு எதிர்பார்த்த அனைத்தும் கைகூடும்.எட்டில் குரு எட்டாத உயரத்தையும் பல சிரமங்கள் தடைகளைக் கடந்து பெற முடியும்.
ஒன்பதில் குரு அனைத்து வகை செல்வமும் நிறைவாக கிடைக்கும், உச்ச பலனை கொடுக்க கூடிய அமைப்பும் இந்த ஒன்பதாம் இடம்தான். பத்தில் குரு தொழிலில் முன்னேற்றம், லாபத்தில் குரு புதிய வாய்ப்புகள் தொழில் உத்தியோகம் நிரந்தரமாக அமையும். விரைய குருவில் சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you