இடுகைகள்

New Moon லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மஹாளய அமாவாசை இன்று பித்ரு காலை வழிபட்டால் என்ன கிடைக்கும்? பித்ரு தோஷம் விலக நாம் என்ன செய்ய வேண்டும்?

படம்
மஹாளய அமாவாசை இன்று பித்ரு காலை வழிபட்டால் என்ன கிடைக்கும்?     மஹாளய பட்சம் அல்லது மஹாளய அமாவாசை என்பது, ஆவணி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையில் துவங்கி புரட்டாசி மாதம் அமாவாசை நாளன்று முடியக்கூடிய இந்த 15 நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும்.          மஹாளயம் என்பது கூட்டமாக கூடுவது என்றும் பச்சம் என்பது 15 நாட்கள் என்று பொருள்படும். அதாவது மறைந்த நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து புறப்பட்டு நம்மோடு தங்கும் இந்த 15 நாட்கள் மஹாளய பச்சம் என கூறப்படுகிறது.இந்தப் 15 நாட்கள் முடிய கூடிய நாள் மஹாளய அமாவாசை.         ஒரு ஆண்டில் 12 முதல் 13 அமாவாசைகள் உள்ளன. இந்த 13 அமாவாசைகளில் மிக முக்கியமானது மூன்று அமாவாசை. அவை ஆடி அமாவாசை,மஹாளய அமாவாசை, தை அமாவாசை.         ஆடி அமாவாசை அன்று பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நம் முன்னோர்கள் ஆவணி பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் பூலோகம் வந்தடைகிறார்கள்.அன்று முதல் 15 நாட்கள் அதாவது மஹாலயவற்றம் எனப்படும் 15 நாட்கள் நம்மோடு தங்கி நாம் கொடுக்கும் எள்ளும்...

மகாளய அமாவாசை விரத வழிபாடு எப்படி? மகாளய அமாவாசை விரத வழிபாடு எப்படி மேற்கொள்வது?

படம்
மகாளய  அமாவாசை வழிபாட்டை முறையாக செய்வது எப்படி?  மகாளய அமாவாசை அன்று காக்கைக்கு இதை நிச்சயம் செய்யுங்கள் அனைத்து ராசிக்காரர்களும் அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்?  மகாளய  அமாவாசையின் சிறப்பு முக்கியத்துவம் என்ன?        ஒரு வருடத்திற்கு 12 அல்லது 13 அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. இப்படி பன்னிரண்டு அல்லது 13 அமாவாசைகள் வந்தாலும், அதில் மிக முக்கியமான அமாவாசையாக புரட்டாசி அமாவாசை, மகாளய அமாவாசை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரியுமா என்றால்?     அதற்கு மிக முக்கிய காரணம் இந்த மகாளய பட்சத்தின் போது முன்னோர்கள் நம்முடன் இருந்து நாம் படைக்கும் தண்ணீர், உணவு ஆகிய அனைத்தையும், முழுமையாகவும், திருப்தியாகவும் ஏற்றுக் கொள்கின்றனர்.     இந்த 15 நாட்களில் இறுதியில் வர கூடியதுதான் புரட்டாசி அமாவாசை. அதாவது, மகாளய அமாவாசை இந்த தினத்தில் முன்னோர்கள் பூமியிலிருந்து புறப்பட்டு பித்ருலோகம் செல்கின்றனர். இதற்கு முன்னதாக வந்த ஆடி அமாவாசையின் போது பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு முன்னோர்கள் வருகின்றனர்.  ...